இக் குழந்தைகளின் பிறப்பிடம்

ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

நானும் - நகையும்

மலைகளில் பிறந்தேன்
மரங்களூடு வளர்ந்தேன்...

மாறும் சூழலுக்கேற்ப
விரிந்தும் ஒடுங்கியும்
நடந்தும் விரைந்தும் திரிகிறேன்...

கரையில் இருந்துகொண்டு
அடைபட்டுக் கிடப்பதாயும்
ஆமைபோல் நடப்பதாயும்
இகழ்வோரே...

"நான் அடைபட்டுக் கிடப்பதால் தான்
உன்னால் கரையில் வாழமுடிகிறது"
சொல்லாமலே செல்கிறேன்
நகைத்தபடியே ....

2 கருத்துகள்:

  1. //"நான் அடைபட்டுக் கிடப்பதால் தான்
    உன்னால் கரையில் வாழமுடிகிறது"
    சொல்லாமலே செல்கிறேன்
    நகைத்தபடியே ....//

    அருமை . வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு