ஒற்றைக் கம்பம் விளக்கெரிக்க
ஒளியும் இருளும் கலந்த
நீண்ட நெடிய சாலை
வெண்பனி விழுந்து
பாதையெங்கும் நிறைக்கிறது
பனி படர்ந்த பாதையினூடு
பயணிக்கின்றன பல்லாயிரம்
பாதங்கள்
அழுத்தமாய் சில
மென்மையாய் பல
வழிகாட்டிச் சில
வழி தொடர்ந்து பல
வெண்பனிப் பாதையெங்கும்
சிதறித் தெறிக்கும் பலவித வர்ணங்கள்
சிவப்பு
மஞ்சள்
பச்சை
நீலம்…
தொடர்ந்து பொழியும் பனியில்
கரைந்து காணாமல் போகின்றன
பாதச் சுவடுகளும்.. பலவித வர்ணங்களும்
பாதங்கள் பதிவதும்
நிறங்கள் தெறிப்பதும்
பனி மூடுவதுமாக…
இயங்கிக் கொண்டே இருக்கிறது பாதை
பனிப் படுகைகள் வழியே
உற்றுப் பார்க்கையில்
சிவப்பு மட்டும்
மிக அடர்த்தியாய்..
தொடர்ந்து பெய்யும் பனியாலும்
மறைக்க முடியாமல்
இன்னும் இன்னும்
தெறித்துக் கொண்டே இருக்கிறது….
சனி, 27 பிப்ரவரி, 2010
வெள்ளி, 26 பிப்ரவரி, 2010
குளமாகிய நான்...............!
ஓலமிட்டபடியே கரைபுரண்டு ஓடும்
ஆற்றுக் கடுத்தபடி வெட்டப்பட்ட
கால்வாய் நீரைப் பருகியபடியே
சலனமற்றுப் படுத்துக் கிடக்கும்
சிறுகுளம் நான்….
ஒழுங்கற்றுச் சுருட்டப் பட்டிருக்கும்
என் கரைகள் உமக்கு அழகாகத்
தோன்றலாம்…
அந்தி வானின் மஞ்சள் வெயில்
சிந்தித் தெறிக்கும் என் அழகிய
மேனிமீது நீங்கள் மையல்
கொள்ளலாம்…
கரைநெடுக அடர்ந்து படர்ந்து
சமதர்மம் வளர்க்கும்
செடிகொடிகளோடு கதைபல பேசும்
பேர்தெரியாத பலவித பூச்சிகளையும்
பறவைகளையும் நீங்கள் இரசிக்கலாம்.
காற்றற்ற பகல் வெளியில்
நீலவான வரங்கில் மேகக்கூட்டம்
நடத்தும் ஓவியக் கண்காட்சிகளை
கழுத்து வலிக்காமலே என்னில்
கண்டு களிக்கலாம்
ஒரு மாலை நேர மழையில்
எகிறும் கெண்டையின்
வெள்ளிப் பளபளப்பில் உங்கள்
உள்ளம் நெகிழலாம்.
கரை நடுவே இரையுண்ட பாம்புபோல்
நீண்டு வளைந்து கிடக்கும்
ஒற்றையடிப் பாதையில் நடந்தும்
ஓரமாய் ஒருபக்கம் நின்றும் நீங்கள்
உருகிப் போகலாம்
மரநிழலில் மாங்காய் கடித்தபடியே
நெளியும் புழுவை ஊசியில் மாட்டி
ஏமாற்றிச் சில மீன்களைப் பிடிக்கலாம்
எட்டிப் பறிக்கும் தூரத்தில்
கொட்டிக் கிடக்கும்
ஆம்பலையும் தாமரையையும்
தட்டிப் பறித்துக் கொண்டோடலாம்…
பால்நிலா ஒழுகும் பின்னிரவில்
வெள்ளை ஒளிப் பின்னணியில்
ஓங்கி உயர்ந்தாடும் கறுப்புப்
பிசாசு மரங்கள் உங்களைப்
பயமுறுத்தலாம்.
கரையோர கிணற்றில்
தாகம் தீர்க்கலாம்
வழியும் வாய்க்கால்
வழியாக வயல்கள்
வளர்க்கலாம்
இத்தனைப் பயன்கள் என்னிலிருந்து கிடைத்தபின்னும்
என்னை ஆழம் பார்க்கும் எண்ணம் உங்களுக்கு ஏன்?
வெளிப்பார்வை போல்
தெளிவானதல்ல என் உட்பக்கம்…
என் மனவாழத்தில் எறியப்பட்ட
கற்கள் கொஞ்சமல்ல
தலைமுறை தலைமுறையாக
எறியப்பட்ட குப்பைகளின்
மட்கிய நீட்சிகளை இன்னும் எனக்குள் பார்க்கலாம்.
என்றோ வெட்டி எறியப்பட்ட
மூங்கில் கழிகளின்
மீதித்துருத்திக் கொண்டிருந்து
உங்களைப் பதம் பார்க்கலாம்
பெரும் பிரயாசைக்குப் பின்
ஒதுக்கித் தள்ளப்பட்ட
வழிப்போக்கர்கள்
கழுவிச் சென்ற கழிவுகளை
மீண்டும் கலைத்து விடாதீர்கள்…
இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்…
எனக்குள் இறங்கி
என் அமைதியைக் குலைக்கும்
உங்கள் முயற்சிகளை.
மண்கரை தாண்டி
ஈரமணல் தொட்டு
உள்ளிறங்கத் துடிக்கும் உங்கள் பாதங்களுக்குப்
பூட்டிடுங்கள்.
தீயைச் சுட்ட விரலைப் போல்
தீண்டத் துடிக்கும்
விரல்களைப் பின்னிழுத்துக் கொள்ளுங்கள்..
என் நீரைக் கொப்பளித்து
என்மீது உமிழ்ந்தவர்களின்
வீச்சமும்
வீரியமும் இன்னும் தீரவில்லை…
கிளறி விட்டு விடாதீர்கள்
ஆழத்தில் அமிழ்ந்திருக்கும்
சேற்றினை…
அதன் நாற்றத்தைச் சகிக்கும் சக்தி
உங்களில் யாருக்கும் இல்லை…
யாருக்குமே.....!
ஆற்றுக் கடுத்தபடி வெட்டப்பட்ட
கால்வாய் நீரைப் பருகியபடியே
சலனமற்றுப் படுத்துக் கிடக்கும்
சிறுகுளம் நான்….
ஒழுங்கற்றுச் சுருட்டப் பட்டிருக்கும்
என் கரைகள் உமக்கு அழகாகத்
தோன்றலாம்…
அந்தி வானின் மஞ்சள் வெயில்
சிந்தித் தெறிக்கும் என் அழகிய
மேனிமீது நீங்கள் மையல்
கொள்ளலாம்…
கரைநெடுக அடர்ந்து படர்ந்து
சமதர்மம் வளர்க்கும்
செடிகொடிகளோடு கதைபல பேசும்
பேர்தெரியாத பலவித பூச்சிகளையும்
பறவைகளையும் நீங்கள் இரசிக்கலாம்.
காற்றற்ற பகல் வெளியில்
நீலவான வரங்கில் மேகக்கூட்டம்
நடத்தும் ஓவியக் கண்காட்சிகளை
கழுத்து வலிக்காமலே என்னில்
கண்டு களிக்கலாம்
ஒரு மாலை நேர மழையில்
எகிறும் கெண்டையின்
வெள்ளிப் பளபளப்பில் உங்கள்
உள்ளம் நெகிழலாம்.
கரை நடுவே இரையுண்ட பாம்புபோல்
நீண்டு வளைந்து கிடக்கும்
ஒற்றையடிப் பாதையில் நடந்தும்
ஓரமாய் ஒருபக்கம் நின்றும் நீங்கள்
உருகிப் போகலாம்
மரநிழலில் மாங்காய் கடித்தபடியே
நெளியும் புழுவை ஊசியில் மாட்டி
ஏமாற்றிச் சில மீன்களைப் பிடிக்கலாம்
எட்டிப் பறிக்கும் தூரத்தில்
கொட்டிக் கிடக்கும்
ஆம்பலையும் தாமரையையும்
தட்டிப் பறித்துக் கொண்டோடலாம்…
பால்நிலா ஒழுகும் பின்னிரவில்
வெள்ளை ஒளிப் பின்னணியில்
ஓங்கி உயர்ந்தாடும் கறுப்புப்
பிசாசு மரங்கள் உங்களைப்
பயமுறுத்தலாம்.
கரையோர கிணற்றில்
தாகம் தீர்க்கலாம்
வழியும் வாய்க்கால்
வழியாக வயல்கள்
வளர்க்கலாம்
இத்தனைப் பயன்கள் என்னிலிருந்து கிடைத்தபின்னும்
என்னை ஆழம் பார்க்கும் எண்ணம் உங்களுக்கு ஏன்?
வெளிப்பார்வை போல்
தெளிவானதல்ல என் உட்பக்கம்…
என் மனவாழத்தில் எறியப்பட்ட
கற்கள் கொஞ்சமல்ல
தலைமுறை தலைமுறையாக
எறியப்பட்ட குப்பைகளின்
மட்கிய நீட்சிகளை இன்னும் எனக்குள் பார்க்கலாம்.
என்றோ வெட்டி எறியப்பட்ட
மூங்கில் கழிகளின்
மீதித்துருத்திக் கொண்டிருந்து
உங்களைப் பதம் பார்க்கலாம்
பெரும் பிரயாசைக்குப் பின்
ஒதுக்கித் தள்ளப்பட்ட
வழிப்போக்கர்கள்
கழுவிச் சென்ற கழிவுகளை
மீண்டும் கலைத்து விடாதீர்கள்…
இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்…
எனக்குள் இறங்கி
என் அமைதியைக் குலைக்கும்
உங்கள் முயற்சிகளை.
மண்கரை தாண்டி
ஈரமணல் தொட்டு
உள்ளிறங்கத் துடிக்கும் உங்கள் பாதங்களுக்குப்
பூட்டிடுங்கள்.
தீயைச் சுட்ட விரலைப் போல்
தீண்டத் துடிக்கும்
விரல்களைப் பின்னிழுத்துக் கொள்ளுங்கள்..
என் நீரைக் கொப்பளித்து
என்மீது உமிழ்ந்தவர்களின்
வீச்சமும்
வீரியமும் இன்னும் தீரவில்லை…
கிளறி விட்டு விடாதீர்கள்
ஆழத்தில் அமிழ்ந்திருக்கும்
சேற்றினை…
அதன் நாற்றத்தைச் சகிக்கும் சக்தி
உங்களில் யாருக்கும் இல்லை…
யாருக்குமே.....!
திறப்போம் நம் மனக் கதவுகளை...!
மனங்கள் மயங்கும்
மனிதர்கள் கசங்கும்
சந்தை வீதியில்
சூரியன் சுட்டெரிக்கும்
காலை வேளையில்
கையில் விளக்குடன்
மனிதனைத் தேடினான் ஒருவன்….!
மாடடைக்கும் கொட்டிலில்
மார்கழிக் குளிரிரவில்
'மனிதன் இருக்கிறான்
மனம் மட்டும் மாறட்டும்'
எனப் பிறந்தான் ஒருவன்…!
அடித்தால் அடி உதைத்தால் உதை
வெட்டினால் வெட்டு
என்று வன்முறை வளர்த்த தேசத்தில்
ஒரு கன்னத்திற்கு மறுகன்னத்தையும்
மேலாடை கேட்டால் உள்ளாடையையும்
கொடுத்துவிடச் சொன்ன தனிமனிதன்…!
உன் கண்ணிண் உத்திரத்தை நீக்கிவிட்டு
பிறன் கண்ணின் துரும்பைப் பார் என்றவன்
இதுவரை பாவம் செய்யாதவன்
எறியட்டும் முதல் கல் என்று
எவரையும் தீர்ப்பிடாதவன்.
உனக்கென்ன வேண்டுமென கேட்கிறாயோ
அதையே பிறனுக்கும் கொடுக்கச் சொன்னவன்!
தேவாலயங்களைத் துறந்து விட்டு
தேகாலயங்களைத் திறக்கச் சொன்னவன்…!
மதத்தின் மதத்தை மிதித்து
மனிதத்தை மதித்தவன் …..!
அவன் ஒரு ஏழை
அவன் ஒரு தொழிலாளி
அவன் ஒரு சாதாரணன்…
உன் எதிரிலேயே
தெருவில் அலைந்து திரியும்
வழிப்போக்கன்…!
மாளிகையும் மஞ்சள் விளக்குகளும்
மல்லிகை மெத்தையும் மஞ்சமும்
கொஞ்சமும் தேவையில்லை யவனுக்கு…!
நொறுங்கி விட்ட இதயங்களை
பொறுக்கிச் சேர்க்க….!
பிரிந்து விட்ட மனங்களை
இணைத்துச் சேர்க்க…!
இனமென்றும் மொழியென்றும்
வீடென்றும் நாடெனறும்
மதமென்றும் ...
கருகிய மனங்களைக் கட்டிக் கோர்க்க…!
வருகிறான் மீண்டும்....
வாழ்க்கைச் சக்கரத்தில் சிக்குண்டு
கிழிந்து நைந்த
கந்தலாடை மனங்களால்
படுக்கை விரிப்போம்..!
பிறக்க இடமின்றி
ஒவ்வொரு கதவாகத் தட்டிய படியே..
வருகிறான்....
திறந்து வைப்போம் நம் மனக் கதவுகளை…!
மீண்டும் பிறக்கட்டும் மனிதம் -நம்
மனங்களில்…..!
இனியக் கிறிஸ்து பிறப்பு பெருவிழா நல்வாழ்த்துக்கள்….!
மனிதர்கள் கசங்கும்
சந்தை வீதியில்
சூரியன் சுட்டெரிக்கும்
காலை வேளையில்
கையில் விளக்குடன்
மனிதனைத் தேடினான் ஒருவன்….!
மாடடைக்கும் கொட்டிலில்
மார்கழிக் குளிரிரவில்
'மனிதன் இருக்கிறான்
மனம் மட்டும் மாறட்டும்'
எனப் பிறந்தான் ஒருவன்…!
அடித்தால் அடி உதைத்தால் உதை
வெட்டினால் வெட்டு
என்று வன்முறை வளர்த்த தேசத்தில்
ஒரு கன்னத்திற்கு மறுகன்னத்தையும்
மேலாடை கேட்டால் உள்ளாடையையும்
கொடுத்துவிடச் சொன்ன தனிமனிதன்…!
உன் கண்ணிண் உத்திரத்தை நீக்கிவிட்டு
பிறன் கண்ணின் துரும்பைப் பார் என்றவன்
இதுவரை பாவம் செய்யாதவன்
எறியட்டும் முதல் கல் என்று
எவரையும் தீர்ப்பிடாதவன்.
உனக்கென்ன வேண்டுமென கேட்கிறாயோ
அதையே பிறனுக்கும் கொடுக்கச் சொன்னவன்!
தேவாலயங்களைத் துறந்து விட்டு
தேகாலயங்களைத் திறக்கச் சொன்னவன்…!
மதத்தின் மதத்தை மிதித்து
மனிதத்தை மதித்தவன் …..!
அவன் ஒரு ஏழை
அவன் ஒரு தொழிலாளி
அவன் ஒரு சாதாரணன்…
உன் எதிரிலேயே
தெருவில் அலைந்து திரியும்
வழிப்போக்கன்…!
மாளிகையும் மஞ்சள் விளக்குகளும்
மல்லிகை மெத்தையும் மஞ்சமும்
கொஞ்சமும் தேவையில்லை யவனுக்கு…!
நொறுங்கி விட்ட இதயங்களை
பொறுக்கிச் சேர்க்க….!
பிரிந்து விட்ட மனங்களை
இணைத்துச் சேர்க்க…!
இனமென்றும் மொழியென்றும்
வீடென்றும் நாடெனறும்
மதமென்றும் ...
கருகிய மனங்களைக் கட்டிக் கோர்க்க…!
வருகிறான் மீண்டும்....
வாழ்க்கைச் சக்கரத்தில் சிக்குண்டு
கிழிந்து நைந்த
கந்தலாடை மனங்களால்
படுக்கை விரிப்போம்..!
பிறக்க இடமின்றி
ஒவ்வொரு கதவாகத் தட்டிய படியே..
வருகிறான்....
திறந்து வைப்போம் நம் மனக் கதவுகளை…!
மீண்டும் பிறக்கட்டும் மனிதம் -நம்
மனங்களில்…..!
இனியக் கிறிஸ்து பிறப்பு பெருவிழா நல்வாழ்த்துக்கள்….!
லேபிள்கள்:
கிறிஸ்து பிறப்பு,
நல்வாழ்த்துக்கள்,
பெருவிழா
கனவின் பொருள் தேடி........!
கனல் பறக்கும் கடும் பாலை
நடுவிலே நான்
கானலும் மணலும் தவிர
கடுகளவும் நீரில்லைச் சுற்றிலும்
என்னைத் தவிர உயிரெதுவும்
இருப்பதுவும் தெரியவில்லை
இமைகளை விரிக்க முடியாதபடி
சுற்றிலும் சூரியனின் ஒளிவெள்ளம்
சுட்டெரித்த சூரியன் திடுமென மறைகிறான்....
பனிபொழிந்து முழுக்க பனிப்பாலையானது
மண்பாலை முழுவதும் வெண்பாலையானது
முழுநிலா... ஒளிவெள்ளம் பொழிய
வெள்ளை உலகிலே
விழி விரியப் பார்த்தபடி நான்...
வெண்மை வெண்மை வெண்மை.....
எங்கும் எதிலும்....
வெண்மைக்குப் பங்கம் வந்திடக்கூடாதென்று
நட்சத்திரங்களும் நகர்ந்து விட்டன
வெண்மேகங்களும் தவழ்ந்து தாழ்ந்து
கருவானத்தை மறைத்து விட்டன
குளிர்ந்த தென்றல் இதமாய் என்
குழல் கலைத்தது...
எலும்பினுள் புகுந்த குளிரால் உடலெங்கும் பரவிய
நடுக்கம்....
ஒரு நொடிப் பரவசத்தைக் கொடுத்து நின்றது.
பற்கள் மட்டும்
பக்குவப் படாமல் படபடத்தபடியே...
கண்ணுக்குள் புகுந்த வெள்ளைமழை
கண்ணீர் மழையாய் கரைந்து விடக்கூடாதென
இமைவிரைந்து மூடிய அந்த ஒரு கணத்தில்...
மறுபடியும் விரைந்து வந்தான்
சுட்டெரித்த படியே சூரியன்
கனல் பறக்கும் கடும் பாலை
நடுவிலே நான்
கானலும் மணலும் தவிர
கடுகளவும் நீரில்லைச் சுற்றிலும்
என்னைத் தவிர உயிரெதுவும்
இருப்பதுவும் தெரியவில்லை
இமைகளை விரிக்க முடியாதபடி
-----------------
இல்லை.... இல்லை இப்போது விரிக்க முடிகிறதே....
மெல்ல விரித்து ... சுற்றிலும் பார்த்தேன்....
சன்னலின் சீலையைத் தாண்டி ஒழுகும்
காலைச் சூரியனின் கீற்றுகள்
குளிரூட்டியின் ....லேசான இரைச்சலும்
மிதமான குளிரும்.....
இன்றுவரை
தேடிக் கொண்டிருக்கிறேன் இந்தக்
கனவின் பொருள் என்ன வென்று....
நடுவிலே நான்
கானலும் மணலும் தவிர
கடுகளவும் நீரில்லைச் சுற்றிலும்
என்னைத் தவிர உயிரெதுவும்
இருப்பதுவும் தெரியவில்லை
இமைகளை விரிக்க முடியாதபடி
சுற்றிலும் சூரியனின் ஒளிவெள்ளம்
சுட்டெரித்த சூரியன் திடுமென மறைகிறான்....
பனிபொழிந்து முழுக்க பனிப்பாலையானது
மண்பாலை முழுவதும் வெண்பாலையானது
முழுநிலா... ஒளிவெள்ளம் பொழிய
வெள்ளை உலகிலே
விழி விரியப் பார்த்தபடி நான்...
வெண்மை வெண்மை வெண்மை.....
எங்கும் எதிலும்....
வெண்மைக்குப் பங்கம் வந்திடக்கூடாதென்று
நட்சத்திரங்களும் நகர்ந்து விட்டன
வெண்மேகங்களும் தவழ்ந்து தாழ்ந்து
கருவானத்தை மறைத்து விட்டன
குளிர்ந்த தென்றல் இதமாய் என்
குழல் கலைத்தது...
எலும்பினுள் புகுந்த குளிரால் உடலெங்கும் பரவிய
நடுக்கம்....
ஒரு நொடிப் பரவசத்தைக் கொடுத்து நின்றது.
பற்கள் மட்டும்
பக்குவப் படாமல் படபடத்தபடியே...
கண்ணுக்குள் புகுந்த வெள்ளைமழை
கண்ணீர் மழையாய் கரைந்து விடக்கூடாதென
இமைவிரைந்து மூடிய அந்த ஒரு கணத்தில்...
மறுபடியும் விரைந்து வந்தான்
சுட்டெரித்த படியே சூரியன்
கனல் பறக்கும் கடும் பாலை
நடுவிலே நான்
கானலும் மணலும் தவிர
கடுகளவும் நீரில்லைச் சுற்றிலும்
என்னைத் தவிர உயிரெதுவும்
இருப்பதுவும் தெரியவில்லை
இமைகளை விரிக்க முடியாதபடி
-----------------
இல்லை.... இல்லை இப்போது விரிக்க முடிகிறதே....
மெல்ல விரித்து ... சுற்றிலும் பார்த்தேன்....
சன்னலின் சீலையைத் தாண்டி ஒழுகும்
காலைச் சூரியனின் கீற்றுகள்
குளிரூட்டியின் ....லேசான இரைச்சலும்
மிதமான குளிரும்.....
இன்றுவரை
தேடிக் கொண்டிருக்கிறேன் இந்தக்
கனவின் பொருள் என்ன வென்று....
ஒரு ஆறும் ஒரு மழையும்........!
பெரிய மலைக்குக் கீழே
பரந்து விரிந்திருந்த அடிவாரப்
படுகையின் நடுவே
படுத்துக் கிடந்தது அந்த ஆறு
உயிரும் உடலும் வற்றிப்போய்
வறட்டு வெயிலில் யுகயுகமாய்
காய்ந்து போன
நீண்ட பெரிய ஒரு மலைப்பாம்பினைப் போல
சிதிலமாகிக் கிடந்தது அது
ஆற்று நீர் உருட்டி விளையாடிய
குளிர் கூழாங்கற்கள் அனைத்தும்
கடும் வெயிலில் காய்ந்து பழுத்திருந்தன.
ஆற்றுப் பாதை முழுதும்
வெயிலில் வெந்து கொண்டிருக்க
தனிமையும் மொளனமும்
தங்களுக்குள் சைகை மொழி பேசியபடி
அலைந்து கொண்டிருந்தன
முட்புதர்கள் முற்றும் எரிந்திருக்க…
ஒண்டியிருந்த ஒன்றிரண்டு மரங்கள் மட்டும்
இலையாடைகளைத் துறந்து விட்டு
கிளைக் கரங்கள் எரிந்த நிலையில்
உடன் கட்டை ஏறிக் கொண்டிருந்தன.
இருந்த ஒன்றிரண்டு புற்களையும்
கருகவைத்த கதிரவன்
கடலுள் மூழ்கி தன் பாவம்
கழுவச் சென்றான்.
அடர்ந்த அமாவாசை இரவு
அன்று மட்டும் இருளாயில்லை
எங்கிருந்தோப் பறந்து வந்த
கார்மேகங்களின் மோதுதலில்
இடியொலியும் மின்னலொளியும்
மங்கல வாத்தியங்களாய் முழங்க
நிறைந்து தளும்பும் ஏரி
கரையுடைத்துப் பாய்வது போல்
கொட்டித் தீர்த்தது வானம்
விடிகாலை வெளிப்போந்தக்
கதிரவன் கண்களுக்கு
மாறியிருந்தன காட்சிகள்
நுரைபொங்கக் கரை ததும்ப
ஓடிக்கொண்டிருந்தது வெள்ளம்
காய்ந்து கிடந்த முட்டைகள்
குளிர்நீர் பட்டதும் வெடித்துப்
பிறந்த மீன்குஞ்சுகள்
எங்கும் நீந்திக் களித்தன
ஓரிரவிற்குள்ளேயே பச்சையாடை
போர்த்தத் துவங்கியிருந்தாள் நிலமகள்.
பழுத்துக் கிடந்த கூழாங்கற்களை
தன் குளிர்கரங்களால் தழுவியபடி
அவற்றின் காதுகளுக்குள்
மலையின் இரகசியங்களை
உரத்துச் சொன்ன தண்ணீரின்
சலசலப்பு எங்கும் எதிரொலித்தது
புதிய கற்களுக்கும்
முன்பிருந்த கற்களுக்கும்
இடையே நடந்த நிலச் சண்டையில்
வழிந்தோடியது மணல் இரத்தம்
காணாமல் போயிருந்த
கொக்கு, காகம், மான், மயில்
மற்றும் உறவினர்கள் அனைவரும்
விருந்துண்ண வந்திருந்தனர்
இறந்து போய் உயிர் வந்தவன் போல்
கவனிப்புக்குள்ளானது ஆறு
மூன்று வருடங்களுக் கொருமுறை
மூன்று மாதம் வீடு வந்து செல்லும்
வெளிநாட்டுக் கணவன் போல்
மூன்று நாள் மழை விடைபெற
கணவனைப் பிரிந்த காரிகையாய்
களையிழந்தது ஆறு
அத்தனை உறவுகளும் மொத்தமாய்
பறந்து விட
குதூகலக் கொண்டாட்டத்தில்
குளித்திருந்த ஆறு தன்
வறண்டு போன நாவை
கடைசி துளி நீரை ஊறிஞ்சி
ஈரமாக்கிக் கொண்டது
பெருமழைக்காய் காத்திருப்பதும்
பெய்த சுவடு காயும் முன் ஓடுவதுமாய்
மழை நிகழ்த்தும் இந்தக் கண்ணாமூச்சி
ஆற்றின் மனதை அறுக்கும்
ஆறா இரணமாகிப் போனது…
ஆற்றின் வேதனைப் பெருமூச்சு
அந்தப் பாழ்வெளியெங்கும்
வெப்பக் காற்றாய் வீசியது
வானத்தைப் பார்த்தபடியே
காத்திருந்து சலித்துப் போன ஆறு
இப்போதெல்லாம் வான் நோக்கி கேட்பது
ஒன்றே ஒன்று தான்.
வந்து விடவே வேண்டாம்
இந்த மழை ….!
பரந்து விரிந்திருந்த அடிவாரப்
படுகையின் நடுவே
படுத்துக் கிடந்தது அந்த ஆறு
உயிரும் உடலும் வற்றிப்போய்
வறட்டு வெயிலில் யுகயுகமாய்
காய்ந்து போன
நீண்ட பெரிய ஒரு மலைப்பாம்பினைப் போல
சிதிலமாகிக் கிடந்தது அது
ஆற்று நீர் உருட்டி விளையாடிய
குளிர் கூழாங்கற்கள் அனைத்தும்
கடும் வெயிலில் காய்ந்து பழுத்திருந்தன.
ஆற்றுப் பாதை முழுதும்
வெயிலில் வெந்து கொண்டிருக்க
தனிமையும் மொளனமும்
தங்களுக்குள் சைகை மொழி பேசியபடி
அலைந்து கொண்டிருந்தன
முட்புதர்கள் முற்றும் எரிந்திருக்க…
ஒண்டியிருந்த ஒன்றிரண்டு மரங்கள் மட்டும்
இலையாடைகளைத் துறந்து விட்டு
கிளைக் கரங்கள் எரிந்த நிலையில்
உடன் கட்டை ஏறிக் கொண்டிருந்தன.
இருந்த ஒன்றிரண்டு புற்களையும்
கருகவைத்த கதிரவன்
கடலுள் மூழ்கி தன் பாவம்
கழுவச் சென்றான்.
அடர்ந்த அமாவாசை இரவு
அன்று மட்டும் இருளாயில்லை
எங்கிருந்தோப் பறந்து வந்த
கார்மேகங்களின் மோதுதலில்
இடியொலியும் மின்னலொளியும்
மங்கல வாத்தியங்களாய் முழங்க
நிறைந்து தளும்பும் ஏரி
கரையுடைத்துப் பாய்வது போல்
கொட்டித் தீர்த்தது வானம்
விடிகாலை வெளிப்போந்தக்
கதிரவன் கண்களுக்கு
மாறியிருந்தன காட்சிகள்
நுரைபொங்கக் கரை ததும்ப
ஓடிக்கொண்டிருந்தது வெள்ளம்
காய்ந்து கிடந்த முட்டைகள்
குளிர்நீர் பட்டதும் வெடித்துப்
பிறந்த மீன்குஞ்சுகள்
எங்கும் நீந்திக் களித்தன
ஓரிரவிற்குள்ளேயே பச்சையாடை
போர்த்தத் துவங்கியிருந்தாள் நிலமகள்.
பழுத்துக் கிடந்த கூழாங்கற்களை
தன் குளிர்கரங்களால் தழுவியபடி
அவற்றின் காதுகளுக்குள்
மலையின் இரகசியங்களை
உரத்துச் சொன்ன தண்ணீரின்
சலசலப்பு எங்கும் எதிரொலித்தது
புதிய கற்களுக்கும்
முன்பிருந்த கற்களுக்கும்
இடையே நடந்த நிலச் சண்டையில்
வழிந்தோடியது மணல் இரத்தம்
காணாமல் போயிருந்த
கொக்கு, காகம், மான், மயில்
மற்றும் உறவினர்கள் அனைவரும்
விருந்துண்ண வந்திருந்தனர்
இறந்து போய் உயிர் வந்தவன் போல்
கவனிப்புக்குள்ளானது ஆறு
மூன்று வருடங்களுக் கொருமுறை
மூன்று மாதம் வீடு வந்து செல்லும்
வெளிநாட்டுக் கணவன் போல்
மூன்று நாள் மழை விடைபெற
கணவனைப் பிரிந்த காரிகையாய்
களையிழந்தது ஆறு
அத்தனை உறவுகளும் மொத்தமாய்
பறந்து விட
குதூகலக் கொண்டாட்டத்தில்
குளித்திருந்த ஆறு தன்
வறண்டு போன நாவை
கடைசி துளி நீரை ஊறிஞ்சி
ஈரமாக்கிக் கொண்டது
பெருமழைக்காய் காத்திருப்பதும்
பெய்த சுவடு காயும் முன் ஓடுவதுமாய்
மழை நிகழ்த்தும் இந்தக் கண்ணாமூச்சி
ஆற்றின் மனதை அறுக்கும்
ஆறா இரணமாகிப் போனது…
ஆற்றின் வேதனைப் பெருமூச்சு
அந்தப் பாழ்வெளியெங்கும்
வெப்பக் காற்றாய் வீசியது
வானத்தைப் பார்த்தபடியே
காத்திருந்து சலித்துப் போன ஆறு
இப்போதெல்லாம் வான் நோக்கி கேட்பது
ஒன்றே ஒன்று தான்.
வந்து விடவே வேண்டாம்
இந்த மழை ….!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)