இக் குழந்தைகளின் பிறப்பிடம்

சனி, 27 பிப்ரவரி, 2010

பனிக்காலம்.....!

ஒற்றைக் கம்பம் விளக்கெரிக்க
ஒளியும் இருளும் கலந்த
நீண்ட நெடிய சாலை

வெண்பனி விழுந்து
பாதையெங்கும் நிறைக்கிறது

பனி படர்ந்த பாதையினூடு
பயணிக்கின்றன பல்லாயிரம்
பாதங்கள்

அழுத்தமாய் சில
மென்மையாய் பல

வழிகாட்டிச் சில
வழி தொடர்ந்து பல

வெண்பனிப் பாதையெங்கும்
சிதறித் தெறிக்கும் பலவித வர்ணங்கள்

சிவப்பு

மஞ்சள்

பச்சை

நீலம்…

தொடர்ந்து பொழியும் பனியில்

கரைந்து காணாமல் போகின்றன
பாதச் சுவடுகளும்.. பலவித வர்ணங்களும்

பாதங்கள் பதிவதும்
நிறங்கள் தெறிப்பதும்
பனி மூடுவதுமாக…
இயங்கிக் கொண்டே இருக்கிறது பாதை

பனிப் படுகைகள் வழியே
உற்றுப் பார்க்கையில்
சிவப்பு மட்டும்
மிக அடர்த்தியாய்..

தொடர்ந்து பெய்யும் பனியாலும்

மறைக்க முடியாமல்

இன்னும் இன்னும்

தெறித்துக் கொண்டே இருக்கிறது….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக